உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டம் : இதுவரை 660 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 72பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரை 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 305,370 பைஸர் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

மாத்தளையில் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன் – ஜீவன் தொண்டமான்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கோரிக்கை