உள்நாடு

பண்டாரகம – அடுளுகமை பகுதி முடக்கம்

(UTV | கொழும்பு) –   கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பண்டாரகம – அடுளுகமை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டுலுகம பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இப்பகுதிக்கு எவ்வாறு கொரோனா வந்தது என இதுவரையில் இனங்காணப்படவில்லை என களுத்துறை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

வைரஸ் தொற்றுகளை கண்டறியும் இயந்திரத்தினை நன்கொடையாக வழங்கினார் பிரதமர்

மத, இன பதற்றத்தை உருவாக்க சில சக்திகள் முயற்சி : பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

கொழும்பிற்குள் விசேட அம்பியுலன்ஸ் சேவை