விளையாட்டு

சர்வதேசக் கிரிக்கெட்டில் தடையாகும் சர்வதேச அணி

(UTV | தென்னாப்பிரிக்கா) – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தில் ஊழல்கள் நடந்திருப்பதால் அந்நாட்டு அரசு வாரியத்தில் தலையிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் முன்னாள் நிர்வாகி மோரே பதவிக் காலத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக 500 பக்க அறிக்கை அந்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு சென்றுள்ளது. இதில் சில பக்கங்கள் இணையத்திலும் வெளியாகியுள்ளன.

இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிதாகியுள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் தடைவிதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸி அணியினர்

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

பகலிரவு டெஸ்ட்டுக்கு முழு பலத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து