உள்நாடு

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்

(UTV | கொழும்பு) – தீ விபத்திற்குள்ளான “MT New Diamond” கப்பலினால் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் விஷேட குழுவினால் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் ஊடாக கப்பல் தொடர்பில் எடுக்கவுள்ள எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளதுடன் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீடுகளை உடனடியாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

லண்டனில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 221 இலங்கையர்கள்

பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அரசியலமைப்பு சபை அனுமதி!

அமைச்சரின் மனைவியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு