உள்நாடு

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் – சந்தேகநபராக பெயரிடப்பட்ட ‘பொடி லெசி’

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபராக ‘பொடி லெசி’ என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க பெயரிடப்பட்டுள்ளார்.

காலி பிரதான நீதவான் இன்று(17) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சீராக்கல் மனுவொன்றின் மூலம் மேற்கொண்ட கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி ரணிலின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது – சுமந்திரன்.

மக்கள் விரும்பினால் தொடர்ந்தும் ராஜபக்சவே நாட்டை ஆட்சி செய்வார்

தேர்தல் பிரச்சனைகளுக்கு விசேட பிரிவு மற்றும் தொலைபேசி இலக்கம்