உள்நாடு

MT New Diamond கப்பல் தொடர்பில் இன்று ஆய்வு

(UTV | கொழும்பு) – MT New Diamond கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நேற்றைய தினம் இலங்கைக்கு வருகைத் தந்த பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இன்று(07) கப்பலில் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தீப்பற்றியுள்ள கப்பலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கப்பலுக்குரிய நிறுவனத்தினால் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட குழுவில் மீட்பு குழுவினர், அனர்த்த மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட 10 பேர் அடங்குகின்றனர்.

Related posts

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் இராஜினாமா!

உயர்தரப் பரீட்சை வகுப்புக்கள் தொடர்பிலான அறிவிப்பு

ஒருநாள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்