விளையாட்டு

கொரோனா – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உயிரிழப்பு

(UTV|இந்தியா)- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் உத்தரபிரதேச அமைச்சரவை அமைச்சருமான சேதன் சவுகான் (Chetan Chauhan)  கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு சாதகமான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சிறுநீரக தொடர்பான வியாதிகளால் அவரது உடல்நிலை மோசமடைந்து, அவரது உறுப்புகள் பல செயலிழக்கத் தொடங்கின பின்னர் செயற்கை சுவாச கருவி மூலம் அவருக்கு சிக்ச்சை அளிக்கப்பட்டது.

எனினும் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேதன் சவுகான் இந்தியாவின் ஆரம்பகால கிரிக்கெட்டில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

ஓய்வு பெற்ற பின்னர், சேதன் சவுகான் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (டி.டி.சி.ஏ) தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் தலைமைத் தேர்வாளர் என பல்வேறு திறன்களில் பணியாற்றினார்.

உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டாவது அமைச்சர் சேதன் சவுகானாவார்.

Related posts

நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

சங்கக்கார குழுவினால் வடமாகாண மக்களுக்கு நிதியுதவி