உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாவது அமர்வில் மூடப்படவுள்ள பொதுமக்கள் பார்வைகூடம்

(UTVகொழும்பு)- இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், அன்றைய தினம் பொதுமக்கள் பார்வைகூடம் திறக்கப்படமாட்டாது என பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பொதுமக்களை பாராளுமன்றத்திற்கு அனுமதிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் தற்போது இணையத்தளம் முறைமை ஊடாக தங்களது தகவல்களை வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி நியமனம் வர்த்தமானியில் வெளியீடு

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது

கொழும்பு பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவும் கண் நோய்!