உள்நாடு

ஹெரோயினுடன் கொசல்வத்த ரைனா கைது

(UTV|கொழும்பு) – பாதாள உலகக்குழு உறுப்பினர் தினுக்கவின் உதவியாளரான கெசல்வத்த ரைனா கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழாமினால் களனியில் கைது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின், 3 தொலைபேசிகள், 19 சிம் அட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேலியகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வர்த்தமானியில் வௌியான புதிய மின்சார சட்டமூலம்!

 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது

முனவ்வராவின் ஜனாஸா வீட்டாரிடம் ஒப்படைப்பு!