உள்நாடு

தேர்தலில் வாக்களிப்போருக்கான அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிக்க செல்லும் போது காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தையும் அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலில் வாக்களிப்பதற்காக சாரதி அனுமதி பத்திரம் பயன்படுத்த முடியும். எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு மோட்டார் வாகன திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை, காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்திற்கு 6 மாத சலுகைகளும், ஜுன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்திற்கு 3 மாத சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சலுகைக் காலம் நிறைவடையாத சாரதி அனுமதி பத்திரத்தை இம்முறை வாக்களிப்பதற்காக அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

சபாநாயகர் மக்களை ஏமாற்றியுள்ளார் – நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர பொதுஜன பெரமுன தீர்மானம்

editor

ரம்பாவால் திறந்து வைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம்!

மர்ஹூம் டாக்டர் இல்யாஸ் அநீதிக்கு எதிராக போராட்ட உணர்வோடு செயற்பட்டவர் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் தெரிவிப்பு | வீடியோ

editor