உலகம்

இத்தாலி – அவசரநிலை தொடர்கிறது

(UTV | இத்தாலி ) – இத்தாலியில் அமுலில் இருக்கும் அவசரகால நிலைமையினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 (கொரோனா) வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே (Giuseppe Conte) தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 2 இலட்சத்து 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 35,129 உயிரிழப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன.

இந்நிலையில் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளிலும் பார்க்க பரவும் வேகம் அதிகளவில் காணப்படுவதாகவும், இதன் காரணமாக தேசிய அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் பயணக் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்

Related posts

மலாலாவுக்கு தீவிரவாத மிரட்டல்

“சீனா ஆபத்துடன் விளையாட முனைகிறது” – ஜோ பைடன்

ஜப்பான் பிரதமர் பதவி விலகத் தயார்