உலகம்

அமெரிக்காவில் 45 இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 நோயாளிகள்

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் ஒரே நாளில் 64,000 இற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 இலட்சத்தை நெருங்குகிறது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொவிட்-19 இனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 இலட்சத்தை நெருங்குகிறது.

மேலும், அங்கு கொரோனாவுக்கு சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

 நடாசாவை கைது செய்ய முடியுமென்றால் ஏன் ஞானசாரவை கைது செய்ய முடியாது? சந்திரிகா

வடக்கு காசாவை தொடர்ந்து தெற்கு காசா பகுதிக்குள் நுழையும் இஸ்ரேல்..!

காசா சிறுவர் நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது!