உள்நாடு

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் சலுகை

(UTV|கொழும்பு) – கொவிட் -19 தொற்று காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட சமுர்தி பயனாளிகளின் வியாபார மற்றும் சுய தொழிலுக்கான வட்டி இல்லாத சலுகைக் கடன்களை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக என்று சமுர்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் பந்துல திலகசிறி கூறுகையில், அவர்களுக்கு ரூ .10,000 வட்டி இல்லாத கடனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ .50,000 கடன் பெற அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

முதல் Green Super Supermarket இலங்கையில்

தயார்படுத்தப்படும் பரீட்சை நிலையங்கள்!

சீன உர நிறுவனத்துக்கு பணம் செலுத்துவது தொடர்பில் ஜனவரியில் தீர்மானம்