உள்நாடு

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு – ஐந்து பேருக்கு விளக்கமறியல்

(UTV|கொழும்பு) – கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-காலிமுகத்திடலில் ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கையரான தனது காதலன் மற்றும் நண்பருடன் காலி முகத்திடலில் இருந்தபோது, இளைஞசர்கள் குழுவொன்று அவர்களுக்கு இடையூறு விளைவித்திருந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் நேற்று கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Related posts

மேல் மாகாண தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

ரணிலுக்கு நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை

ஜனாதிபதியின் – மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி.