உள்நாடு

ஆறு பக்க அறிக்கையை முன்வைத்துள்ள மஹிந்தானந்த

(UTV|கொழும்பு) – 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலக கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விடுத்த கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டியவில் உள்ள அவரின் அலுவலகத்தில் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவினர் இன்று(24) வாக்குமூலம் பதிவுசெய்தனர்.

ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான கருத்துகளையும், ஆவணங்களையும் நான் இன்று பொலிஸாரிடம் கையளித்தேன். 24 காரணங்கள் அடங்கிய 6 பக்க அறிக்கையை முன்வைத்துள்ளேன் என மஹிந்தானந்த அலுத்கமகே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண போட்டித்தொடரில் எமது அணி தோல்வி அடைந்தமை தொடர்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதன்பின்னர் பல தரப்பினரும் குறித்த போட்டி தொடர்பில் எனக்கு முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

நான் அரசியல் நோக்கிலோ அல்லது பிரச்சாரம் தேடுவதற்காகவோ இவ்வாறு கருத்து வெளியிடவில்லை. எனவே, விசாரணைகள் முடிவடையும்வரை விமர்சனங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். பேசுவதை நிறுத்துவோம். விசாரணை அறிக்கை வரும்வரை காத்திருப்போம். என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹிந்தவுக்கு மோடியிடம் இருந்து வாழ்த்து

குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் அதிகரிப்பு