உள்நாடு

‘நெருப்பு வலய சூரிய கிரகணம்’ தென்படும் நேரங்கள்

(UTV | கொவிட்-19) – 2020ம் ஆண்டின் முதலாவது சூரியக்கிரகணம் நாளை(21) நிகழவுள்ளது.

இதன்போது இலங்கையர்களினால் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் முற்பகல் 9.15 தொடக்கம் பிற்பகல் 3.04 வரை சூரியகிரகணம் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாளை முற்பகல் 10.20 அளவில் சூரியகிரகணத்தை பகுதியளவில் கொழும்பு நகரில் பார்வையிட முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முற்பகல் 10.24 முதல் யாழ்ப்பாணத்திலும் முற்பகல் 10.34 முதல் மாத்தறையிலும் சூரிய கிரகணத்தை பகுதியளவில் பார்வையிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். நெருப்பு வலய சூரிய கிரகணம் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

Related posts

இஸ்ரேல் போரால், இலங்கையில் அதிகரிக்கப்போகும் எரிபொருளின் விலை?

நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு நாடுகள் ஆதரவு – ஜனாதிபதி ரணில்

editor

பரிசு பொருட்கள் வழங்க முடியாது; திரும்பி சென்ற முன்னாள் ஜனாதிபதி