உலகம்

இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 2,000க்கும் அதிகமானோர் பலி

(UTV | இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இதுவரையில் 354,161 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் புதுப்பித்ததை தொடர்ந்து, அந்நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 11,921 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழப்புகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்பு

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே புதியதொரு வர்த்தக ஒப்பந்தம்

நியூசிலாந்து பிரதமரின் திருமணம் ஒத்திவைப்பு