உள்நாடு

போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீளவும் இன்று முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீளவும் இன்று(08) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பேரூந்து முன்னுரிமை ஒழுங்கை விதி மொறட்டுவை முதல் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை விதி நடைமுறைப்படுத்தப்படும் என மேல்மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோன் தெரிவித்திருந்தார்.

மேலும், இது குறித்து கண்காணிப்பதற்காக நாளாந்தம் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக, 500 மேலதிக அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் அழைப்பு

நாளை பொலன்னறுவைக்கு நீர்வெட்டு

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது