உள்நாடுசூடான செய்திகள் 1

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிக்க இடமளிக்கப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) – சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தியவசியமற்ற பயணங்களுக்காக பொது சேவையினை பயன்படுத்த வேண்டாம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“.. எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் அமுல்படுத்தப்படும். ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும். சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

பேரூந்து மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சகல பேருந்துகளிலும்ஆ சனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பேரூந்து தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்..” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

IMF தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்கள் இன்று முதல்

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உலக நாடுகள் பல கண்டனம்

காற்றின் வேகமானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்பு