உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பிலான விசேட தீர்மானம் இன்று

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) முற்பகல் கூடவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்தும் பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டமையினால், ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் பொதுத்தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் பின்னரே தேர்தல் திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

விளையாட்டு நிகழ்வுகளை நடத்த சுகாதார ஆலோசனைகள்

நாளை(21) நள்ளிரவு முன்னெடுக்க இருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை