உள்நாடு

யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயம்

(UTV | கொழும்பு) -யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியா மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையே வீதியோரத்தில் நின்ற யானை தாக்கியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யானை தாக்கி முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

Related posts

கப்ராலுக்கு தொடர்ந்தும் வெளிநாடு செல்ல தடை

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளருக்கும் – செந்தில் தொண்டமானுக்கும் இடையில் கலந்துரையாடல்.

உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்!!