உள்நாடு

ஊரடங்கை மீறிய 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் நேற்று(27) இரவு 10 மணி முதல் இன்று(28) அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் 38 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 66 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் 18 ஆயிரத்து 733 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட 21 ஆயிரத்து 787 பேருக்கு எதிராக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 8 ஆயிரத்து 671 பேருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

மெனிங் சந்தை இன்றும் திறப்பு

அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வு கூட்டம்

வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக “டிஜிகொன்” பொருளாதார எண்ணக்கரு முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார் – சச்சிந்ர சமரரத்ன.