விளையாட்டு

மூன்று வருட தடைக்கு எதிராக உமர் அக்மல் மேன்முறையீடு

(UTV – பாகிஸ்தான் ) – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 3 வருடங்கள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக உமர் அக்மல் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கிரிக்கெட் நிறுவனம் இன்னும் 15 நாட்களில் விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் பாகிஸ்தான் சுப்பர்லீக் போட்டியின் போது இடம்பெற்ற பந்தயம் தொடர்பில் அவருக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பந்துவீச தாமதமாகியமையினால் இலங்கை அணிக்கு அபராதம்

ஐந்தாவது முறையாகவும் மும்பை கிண்ணத்தை சுவீகரித்தது

இளம் வீரருக்கு காலணிகளை பரிசளித்த கிரிக்கெட் வீரர்!