உள்நாடு

‘அம்பன்’ சூறாவளி வட கிழக்காக நகர்கிறது

(UTV – கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை வீழ்ச்சி இன்று (20) பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறித்த திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அம்பன் சூறாவளி வட கிழக்காக நாட்டைவிட்டு நகர்ந்து செல்வதுடன் பிற்பகலில் பங்களாதேஷின் மேற்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

மினுவாங்கொடை கொத்தணி -சட்டமா அதிபர் விடுத்துள்ள உத்தரவு

பழுதடைந்த ரயில் என்ஜின்கள் – வண்டிகள் பற்றி அறிக்கையிட கோரிக்கை

காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் ஜனாதிபதி ரணில்! காசோலையும் கையளிப்பு