உள்நாடு

ஊரடங்கை சட்டத்தை மீறிய 730 பேர் கைது

(UTV|கொழும்பு)- நேற்று(18) காலை 6 மணி முதல் இன்று(19) காலை 6 மணிவரையிலான 24 மணித்தியால காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 252 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 59 ஆயிரத்து 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 16 ஆயிரத்து 668 வாகனங்களும் இதுவரை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 488 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 6,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

வரவு – செலவுத் திட்டம் 2021

நாளை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு