உள்நாடு

உயர் தரப்பரீட்சைகளில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி

(UTV|கொழும்பு)- 2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சைகளின் போது கணிப்பான்களை (calculator) பயன்படுத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது

இதற்கமைய நிழற்படுத்தப்படாத சாதாரண கணிப்பான்களை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கணக்கீடு, பொறியியலுக்கான தொழில்நுட்பவியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய நான்கு பிரிவுகளுக்கு மாத்திரம் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

எனினும் தொலைபேசி கணிப்பான், மின்னணு கணிப்பான் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 123 பேர் கைது

சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும் பாராளுமன்ற சிறப்புரிமை குழு!

வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அரசுக்கு இரு வார காலக்கேடு