உள்நாடு

உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்

(UTV | கொழும்பு) -ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 11, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்க செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துபண்டார பொது தேர்தலை நடத்துவதற்கான வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்க செய்யுமாறு கோரி கடந்த 6 ஆம் திகதி உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காலிமுகத்திடல் தாக்குதலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டிக்கிறது

அரச ஊழியர்களின் , ஓய்வூதியம் ஜனவரியிலிருந்து வழங்க தீர்மானம்!

பண மோசடி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் எச்சரிக்கை!