உள்நாடு

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சார பொதுக் கூட்டங்களும் நடத்தப்படாது

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப் பட்டிருந்தாலும், சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பு வரும்வரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சார பொதுக் கூட்டங்களும் நடத்த மாட்டோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக இன்று(21) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணைக்குழுவால், வாக்களிக்கும் முறைகளில் விஷேட தொழில்நுட்ப முறைகளை கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பு வரும்வரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரசார பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட மாட்டாது என நாமல் ராஜபக்ஷ ஏலவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

பதுளையில் பாரிய தீ விபத்து!

சனத் நிஷாந்தவின் வீடு எரிப்பு சம்பவம் : சந்தேக நபர்கள் விடுதலை!