விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் புதிய திகதி அறிவிப்பு

(UTV|டோக்கியோ ) – டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் ஜூலை 23 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதமே போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித் தொடர்கள் திட்டமிட்டவாறு நடைபெறும்

கர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு

மஹேல துபாய் நோக்கி பயணம்