உலகம்

இந்தியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 987ஆக அதிகரிப்பு

(UTVNEWS | INDIA) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 987 ஆக அதிகரித்துள்ளது.

இவற்றில் 87 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண சுகம் அடைந்துள்ளனர்.

இது தவிர, 25 பேர் மரணமடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இந்தியாவில் பிரகடனப்படுத்தப்பட்ட நாடு தழுவிய முடக்கம் காரணமாக பாதிப்படைந்துள்ளவர்களுள் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் பின்னிலையில் உள்ளவர்களே என தெரிவித்த அவர், அதற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வாய் வழியாக உட்கொள்ளும் பைசர் விரைவில்

ரொய்ட்டர் ஊடகவியலாளர் இஸ்ரேலின் டாங்கி தாக்குதலால் கொல்லப்பட்டது உறுதி!

Oxford-AstraZeneca : உண்மையில் இரத்தம் உறைதலை அதிகரிக்குமா?