உலகம்சூடான செய்திகள் 1

இத்தாலியில் கொரோனா வைரஸ் – 17 பேர் பலி

(UTV|கொழும்பு) – இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயித்து 807 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, இத்தாலி, ஈராக் உள்ளிட்ட 30-க்கும் அதிமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இத்தாலியில் 650 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – அன்டோனியோ குட்டரெஸ் இடையில் சந்திப்பு.

உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் பதவி விலக தயாராகும் ஐ.தே.கட்சியினர்

கெக்கிராவயில் துப்பாக்கிச் சூடு