உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் 110 நிறுவனங்களுக்கு விருதுகள்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 28 ஆம் திகதி 110 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற கட்டடத் தொகுயில் இடம்பெறவுள்ளது.

அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் 844 இன் 2018 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் 800க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையை அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இன்று(18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதேவேளை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் செயல்படுத்தப்படும் அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் இந்த கணினிமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்துக்கு அமைய, உயர் செயல்திறன் மட்டத்தை அடைந்த நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் மறைமாவட்ட ஆயர் – ரிஷாட் சந்திப்பு

நாட்டிற்கு வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு மன்னிப்பு கடிதம்