உள்நாடு

சுயாதீன சங்கம் மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்பாட்டம்

(UTV|கொழும்பு) – ஈ.டி ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன சங்கம் இன்றைய தினம் மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது.

வைப்பிடலிடப்பட்ட தமது நிதியை விரைவாக பெற்றுத்தருமாறு கோரி அந்த சங்க உறுப்பினர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையதிற்கு அருகில் இருந்து மத்திய வங்கி வரை பேரணியாக வந்த ஈ.டி.ஐ வைப்பாளர்கள் மத்திய வங்கிக்குள் பிரவேசிக்க முற்பட்டதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட இடத்தில் கூடி தமது எதிர்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஈ.டி.ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன சங்கத்தின் உறுப்பினர்கள் 10 பேர் பிரதமர் காரியாலயத்திற்கு கலந்துரையாடலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் வருண ராஜபக்ச மற்றும் மகேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு

editor

சமையல் எரிவாயு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

கசிப்பு கஞ்ஞாவைஏற்றுமதி செய்யவேண்டும் – டயனா கமகே.