உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் தலைவராக மஹிந்த

(UTV|கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தவிசாளராக மைத்திரிபால சிறிசேனவும் பெயரிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும், தேசிய அமைப்பாளர்களாக விமல் வீரவன்ச மற்றும் தயாசிறி ஜயசேகரவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் புதிய கூட்டணியின் சின்னமாக மொட்டு சின்னம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கம்பஹாவிற்கு 8 மணிநேர நீர் வெட்டு

அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்க தீர்மானம்

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்குமாறு பரிந்துரை?