உள்நாடு

சஜித் தலைமையிலான கூட்டமைப்புடன் றிசாட்

(UTVNEWS | COLOMBO) –எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சில மாவட்டங்களில் சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் இணைந்தும், சில இடங்களில் தனித்தும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,ஜக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பாரிய கூட்டணி ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. அதில் பல கட்சிகள் புத்தியீவிகள் சிவில் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு பலமான ஒரு கூட்டு அமைப்பு உருவாக்குவதற்கான திட்டம் தீட்டப்படுகின்றது.

அந்த கூட்டமைப்புடன் இணைந்து சில மாவட்டங்களில் போட்டியிடுவோம். சிலமாவட்டங்களில் தனித்து போட்டி இடதீர்மானித்திருக்கிறோம். இந்த விடயங்களை எமது கட்சியின் உயர்பீடம் கூடி முடிவினை எடுக்கும் என்றார்.

Related posts

கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிப்பு

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம்