உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியலமைப்புச் சபை நாளை கூடவுள்ளது

(UTV| கொழும்பு) – அரசியலமைப்புச் சபை நாளை(24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் சுமார் 15,000 குரல் பதிவுகள் அடங்கிய 5 இறுவெட்டுகள் நேற்று மாலை, பாராளுமன்ற செயலாளர் நாயக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சபாநாயகரிடம் அவை ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவற்றை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கும் இடையில் சந்திப்பு!

மாணவர்களை குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை

இலங்கை மின்சார சபை பேச்சாளர் நொயல் பிரியந்தவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.ஜீவன் இராஜேந்திரன்