உள்நாடு

மீளாய்வு மனு இன்று

(UTV|கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, இன்றைய தினம் மன்றில் முன்னிலையாக வேண்டும் என மேல்நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி, நாரேண்பிட்டி தனியார் மருத்துவமனையில் வைத்து ராஜித சேனாரட்ன கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஐ.தே.கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி அகில போட்டி

A/L, புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில்  மாற்றம் இல்லை 

ஊரடங்கு உத்தரவை மீறிய 6,850 போ் கைது