கேளிக்கை

காதலை யாராலும் கணிக்க முடியாது – சுருதிஹாசன்

(UTVNEWS | INDIA) -தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சுருதிஹாசன், காதலை யாராலும் கணிக்க முடியாது என கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேலை காதலித்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். இசை கச்சேரிகளுக்காக சமீப காலமாக வெளிநாடுகளில் சுற்றி வந்த அவர் இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்.
ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தி படமும் கைவசம் உள்ளது.
அவர் அளித்த பேட்டி வருமாறு:- “காதலில் விழும் சந்தர்ப்பங்களை யாரும் கணிக்க முடியாது.
எப்போது யாருக்கு காதல் வரும் என்பதையும் சொல்ல முடியாது. என்னை காதலிக்கும் ஒரு நல்ல மனிதர் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த நல்ல மனிதருக்காக நான் காத்து இருக்கிறேன். கண்டிப்பாக அப்படி ஒரு நல்லவர் கிடைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என சுருதிஹாசன் தெரிவிததுள்ளார்.

Related posts

நவம்பரில் நயன்தாராவுக்கு திருமணம்?

கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில்

மீண்டும் இணையும் நானி – சமந்தா