சூடான செய்திகள் 1

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் இன்று(08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய, மாகாண சபையின் அதிகாரம் ஊவா மாகாண ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்து அவை கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஊவா மாகாண சபை மாத்திரம் செயற்பட்டது.

இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் நாட்டின் சகல மாகாண சபைகளின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

Related posts

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டது

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

சிலி தலைநகருக்கு அவசர நிலை பிரகடனம்