சூடான செய்திகள் 1

அனைத்து சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளும் 07ம் திகதிக்குள் அகற்றப்பட வேண்டும்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளர்களின் விளம்பர நடவடிக்கைகள் முன்னெடுப்பதை தேர்தல் ஆணைக்குழு தடை செய்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று(03) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களின் அனைத்து சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளையும் வேட்புமனுத்தாக்கல் இடம்பெறும் 07 ஆம் திகதிக்குள் அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று திறப்பு

வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து…

பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்