சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நிறைவு

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.

இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வாக்களிப்பதற்கு மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

எதிர்வரும் மாதம் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று(27) முற்பகல் 09 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதுடன், இன்று பிற்பகல் 4.15 மணி வரையில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் 1192 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Related posts

வைத்தியர்களுக்கு சம்பளம் இல்லை-சுகாதார அமைச்சு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஆவணங்கள் கிடைத்ததும் அர்ஜுன் தொடர்பில் சிங்கப்பூர் தீர்மானம்