சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனம் செலுத்திய 433 சாரதிகள் கைது

(UTV|COLOMBO) – மதுபோதையில் வாகனம் செலுத்திய 433 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் நேற்று முன்தினம் முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்படி, நேற்று(06) காலை 06 மணி முதல் இன்று(07) காலை 06 மணிவரையான காலப்பகுதியினுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கணவனின் அசிட் வீச்சுக்கு இலக்காகிய மனைவி மற்றும் மகள்

புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு