சூடான செய்திகள் 1

மீனவர் சடலமாக மீட்பு

(UTV|COLOMBO) நீர்கொழும்பு – ஏத்துகால கடற் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான படகில் இருந்து மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – ஏத்துகால பிரதேசத்தினை சேர்ந்த 51 வயதுடைய மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி குறித்த நபர் உட்பட 04 பேர் கடலுக்கு சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.படகு கற்பாறை ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் 03 பேர் உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி  குறித்த நபர் நீரில்மூழ்கி காணாமல் போயுள்ளதுடன், அவரது சடலம் புனபிடிய கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

சுழிபுரம் சிறுமி கொலை வழக்கின் சந்தேக நபருக்கு விளக்க மறியல்

24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

உயர் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு