சூடான செய்திகள் 1

கொழும்பில் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTV|COLOMBO) நாளை மறுதினம் காலை 9.00 மணி முதல் 24 மணி நேரம் ஹோகந்தர பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதுடன், கொழும்பில் மேலும் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை மாகநகர சபைகளின் அதிகார பகுதிகள், மஹரகமை, பொரலஸ்கமுவ நகர சபையின் அதிகார பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதேச சபையின் அதிகார பகுதிகள், ரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்கள் விளக்கமறியலில்

இலங்கையின் நகரங்களது நிலவரம்

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை