சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு…

(UTV|COLOMBO) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பை வழங்குவது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவித்து நிறைவு செய்யும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts

வைத்தியர்களது பணிப்புறக்கணிப்பில் எவ்வித நியாயமும் இல்லை…

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

சீரற்ற பொலித்தீன் உற்பத்தி பாவனை காரணமாக இலங்கையில் நெருக்கடி நிலை