கிசு கிசுசூடான செய்திகள் 1

விசேட வர்த்தமானி வெளியானது!

(UTV|COLOMBO) நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு சில கட்டுப்பாடுகளுக்கு உட்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு தொடர்பில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை மற்றும் முகத்திரை தடை தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகத்தை முழுமையாக மறைக்கும் என்பதற்கான அர்த்தம், அவ்வாறான ஆடைகளை அணிந்து செல்லக் கூடாத பொது இடங்கள் உள்ளிட்ட சகல தகவல்களும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு அறிவிக்கப்படும்

நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள வடமாகாண முதலமைச்சர்

இரு வேறு பிரதேசங்களில் இருந்து நால்வர் கைது