சூடான செய்திகள் 1

இலங்கைக்குத் தேவையான உதவியை வழங்கத் தயார்

(UTV|MALDIVES) பயங்கரவாத செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு இலங்கைக்குத் தேவையான அதிகபட்ச உதவியை வழங்குவதற்குத் தயார் என, மாலைதீவின் ஜனாதிபதி இப்றாஹிம் மொஹமட் சோலி (Ibrahim Mohamed Solih) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதுடன் நாட்டில் இடம்பெற்ற மிலேச்சதனதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சகோதர நாடு என்ற வகையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையுடன் கைகோர்த்து செயற்படுவதற்குத் தயார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்

சர்வதேச மட்டத்தில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமித் வீரசிங்க மீண்டும் விளக்கமறியலில்