சூடான செய்திகள் 1

நாட்டின் ஒரு சில இடங்களில் மழை…

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலன பிரதேசங்ளில் இன்றைய தினம் மழையற்ற வானிலையே நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இருப்பினும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில், அப்பிரதேங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், இடி மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

 

 

 

 

Related posts

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவும் – சபாநாயகர்

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன பிணையில் விடுதலை