சூடான செய்திகள் 1

காலி – கொழும்பு பிரதான வீதி பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல்

(UTV|COLOMBO) காலி வீதி, ரத்கம பிரதேசத்தில் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவ்வீதியிலான போக்குவரத்துக்கு முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக காலி – கொழும்பு பிரதான வீதி ரத்கம பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 23ம் திகதி குறித்த இரண்டு வர்த்தகர்களும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதுடன், இருவரினதும் சடலங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியிருந்தார்.

 

 

 

Related posts

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு

முதியோரை பராமரிக்காமை தொடர்பில் முறைப்பாடுகள்

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !