விளையாட்டு

பங்களாதேஷ் வீழ்த்தி, நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றியது

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, டுனெடினில் இடம்பெற்ற நிலையில், நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதனையடுத்து 331 என்ற தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 47.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

 

 

 

 

Related posts

ஐபிஎல் போட்டிக்கு வரும் ‘குஜராத் டைட்டன்ஸ்’

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி…

என் அப்பா இதை தான் கற்று தந்தார்